Kavithai  

Name

Email

Points 

( Back )

     Select Best Kavithai & Assign Point         UTS APPROVAL

ADD NEW

MODIFY

SL #

TITLE

KAVITHAI

MEMBER NAME

PUBLISHED ON

1

விட்டுப்போ என்னிடம்

உன்னால் முடியவில்லையெனில்
விட்டுப்போ என்னிடம்
முடித்துவிட்டுக்
கேட்கிறேன் உன்னிடமே
அடுத்தது என்னவென்று .

Syed

10/21/2009 7:12:41 AM

2

திரும்ப கிடைக்குமா?

கட்டிய மஞ்சள் கயிறின் வாசனை
மாறும் முன்னே - கட்டியவளை கண்ணீரில் கரைத்து விட்டு
கடனடைத்து காடு கரை வாங்கி சேர்க்க,
கடல் கடந்து நாடு கடந்து
கட்டியவளை நினைத்து கட்டிலுக்கு முத்தமிட்டு
தலையணையை கட்டிக் கொண்டு உறங்குகிறாயே!

கோடிகோடி கட்டி தங்கங்களை கொட்டினாலும்
நீ வாழ மறந்த வசந்தகால வாழ்க்கை கிடைக்குமா?

பணம் எனும் உணவு தேவைதான் - ஜீரணிக்கிறேன்
வாழ்க்கை எனும் உடலே இல்லையெனில்
உணவு எனும் பணம் உபயோகப்படாதே?

இளைஞனே! திருப்பிப் பார்!
நீ அனுபவிக்க மறந்த உன் வாழ்க்கை பாதச் சுவடுகளை

Padmanaban Rathinam (Taken from Blog)

Ramesh

4/5/2009 12:06:13 AM

3

விடியாத பொழுது....

விடியாத பொழுது....
உறங்கிக் கொண்டிருக்கும்
பூக்கள்....
உறங்கப் போய்க்கொண்டிருக்கும்
நிலா....
அடங்கிப் போயிருக்கும் என் வீட்டுத்
தெருக்கள்....
என விடிந்தும்
விடியாததுமான
அந்த அமைதியான நேரங்களில்
கண்மூடி
நினைப்பதை விட
கண்திறந்து.... காத்திருப்பது
சுகம் தான்....!!

Mahesh

4/7/2012 10:31:32 AM

4

தேவதையே திருமகளே !!!!!

தேவதையே திருமகளே !!!

விரிந்த மலராய் புன்னகைப்பவளே - உனை
விரி மலராய் மனம் நினைத்தேன் - என்
விழி மலரும் மயங்கிடவே - உன்
எழில் வதனம் எண்ணி ஏங்கி.....- தமிழ்
மொழி தனிலே கவி தொடுத்தேன்....

யாழிசை புன்னகை கொடு - என் கவிக்கு நீ
இன்னிசை இப்போது தர வேண்டும்
உன் சிரிப்பு உள்ளுக்குள் கீர்த்தனை - எனவே
உள்ளமெல்லாம் இன்ப மயம்
காதல் கடவுள் மன்மதனின் கோவிலிலே
காலமெல்லாம் விழாக் கோலம்

தேவதையே திருமகளே தேனூறும் மாங்கனியே
சிற்றிடையே சிறந்தவளே சீரான என்னழகே
அள்ள நான் மெல்ல வா
கொள்ள நான் கொஞ்ச வா
கொல்லவே காதல் வலி மிஞ்சவே துஞ்ச வா
சொல்லவே வார்த்தை இல்லை என் சொர்க்கமே நீ வா

Mahesh

4/7/2012 10:30:11 AM

Print

Total Record =

4